/* */

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில்  திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி
X

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் உத்திரமேரூர் , வாலாஜாபாத் , ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் துணை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அவ்வகையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடு சரிபார்ப்பு , உள் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மகப்பேறு பிரிவு மற்றும் ஆய்வகங்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

துணை மருத்துவமனைகளுக்கு வரும் கிராமப்புற மக்களுக்கு சுகாதார குறித்து வழிகாட்டுதலும் தரமான சிகிச்சைகளும அளிக்க வேண்டும் எனவும் மேல் சிகிச்சைக்கு முறையான மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து உடல் நலம் காக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை வழங்கினார்.

Updated On: 26 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!