/* */

விவசாய நிலம் அழிப்பு-விவசாயிகள் கவலை

நெற்பயிர்களை அழித்த எண்ணெய் நிறுவனங்கள் செய்கையால் உத்திரமேரூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

விவசாய நிலம் அழிப்பு-விவசாயிகள் கவலை
X

அறுவடைக்கு சில காலமே உள்ள நிலையில் நெற்பயிர்களை அழித்த எண்ணெய் நிறுவனங்கள் செய்கையால் உத்திரமேரூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 9 வது வார்டு மல்லியங்கரணை மதுரா பகுதியில் விவசாய விளை நிலங்கள் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு எண்ணெய் நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி கதிர் முற்றிய, அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விவசாய பயிர் நிலங்களை அழித்து பூமிக்கடியில் பைப் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நெற்கதிர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி எண்ணெய் நிறுவனங்கள் அழித்து பள்ளம் தோண்டியதாக கூறிய விவசாயிகள் செய்வதறியாது வேதனை அடைந்தனர். வேகமாக அழிந்து வரும் விவசாய தொழிலை பெருத்த நஷ்டத்திலும், நாங்கள் எங்கள் மூதாதையர் காலம் தொட்டு, செய்து வருகிறோம். இது போன்ற செயல்களினால் வாழ்வாதாரம் , பொருளாதார இழப்பையும், நாங்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தங்களுக்கு மத்திய, மாநில, அரசுகள் உரிய நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 March 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்