/* */

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் இருவேறு புள்ளி விவரங்களை அளிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகளை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெற்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 916 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் செய்தியாளர்கள் தங்கள் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரு ஒன்றியங்களில் 3,69.099 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது.

இருவேறு மொத்த வாக்காளர் புள்ளி விவரங்களால் செய்தியாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக இந்தப் புள்ளிவிவரங்களை மக்களுக்கு அளித்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக 3183 வாக்காளர்கள் சேர்ந்துள்ளது எப்படி என தெரியவில்லை.

முதல்கட்ட வாக்கு பதிவின்போது காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து எழுபது நபர்கள் விடுபட்டு உள்ளதாக கூறி மாவட்ட ஊராட்சி திட்ட முகமை திட்ட இயக்குனரை அப்பகுதியினர் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நிர்வாகம் வெளியிடும் செய்திக்குறிப்பில் புள்ளிவிவரங்கள் முரண்பட்டதாக இருப்பது தொடர் குழப்பத்தை ஏற்படுகிறது.

Updated On: 9 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்