காஞ்சிபுரத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம்   ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் எதிரே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரத்தில் தாசில்தார் அலுவலகம் எதிரே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறிகள், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் கண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அக்கட்சி நிறுவனர் கமலஹாசன் தெரிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காஞ்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
why is ai important to the future