Begin typing your search above and press return to search.
ஆப்பக்கூடல் அருகே இரு வாகனம்-டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பலி
வேம்பத்தி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். பனியன் கம்பெனி தொழிலாளியான இவர் சொந்த வேலை காரணமாக, ரெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னாள், சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போதுஎதிர்பாராத விதமாக டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரமோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.