/* */

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி

ஈரோட்டில் இன்று காலை மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி
X

பைல் படம்.

ஈரோடு பெரியசேமூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). தொழிலாளி. இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் எல்லப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அதே ரோட்டில் இவருக்கு எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் எல்லப்பாளையம் சக்திநகரை சோந்த சக்தி (வயது 25) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சோலார் நகர் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரகாசுக்கு இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் பிரகாஷ் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...