/* */

கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் மாயம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் மாயம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருங்கரடை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவர் அத்தாணி ரோட்டில் கம்மங்கூழ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வங்கியில் அடமானம் வைக்க தனது வீட்டில் இருந்து 5 பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தார். பின்னர் அந்த நகையை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து விட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் பூங்கொடியிடம் 20 பேர் குடிக்கும் அளவுக்கு கம்மங்கூழ் வேண்டும் என்று கேட்டார்.

இதையடுத்து பூங்கொடி பெரிய பாத்திரம் எடுக்க தனது வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில் வாலிபர் பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு சென்று விட்டார். பூங்கொடி பாத்திரம் எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது அந்த வாலிபரையும் காணவில்லை. தான் வைத்திருந்த நகையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...