Begin typing your search above and press return to search.
கருங்கல்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்
கருங்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் சாக்கடையில் தவறிவிழுந்து வாலிபர் சாவு; போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, முதற் கட்ட விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (வயது 26) என்பதும், நேற்றிரவு மது அருந்திவிட்டு போதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.