Begin typing your search above and press return to search.
பவானி அருகே வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
பவானி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). இவர் கடந்த ஒரு வருடமாக வேலை கிடைக்காததால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று தனசேகர் வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.