/* */

அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி புட்டியம்மாள். மகாதேவனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி மகாதேவன் கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பர்கூர் கிராமம் அருகே உள்ள குட்டையூர் மக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் மகாதேவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகாதேவன் உடலை மீட்டு அந்தியூரில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மகாதேவன் குடிபோதையில் அந்த வழியாக வந்த போது தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 May 2022 12:52 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!