6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் -ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகல் எடுக்கும் பிரிவில் வேலை செய்து வந்தார். கடந்த 9-3-2019 அன்று இவர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. சாலையோரத்தில் வாத்துக்கறி கடை ஒன்றை பார்த்த அவர், கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் 6 வயது சிறுமி மட்டும் இருந்தார். சிறுமியிடம் தண்ணீர் கொடுக்கும்படி சுபாஷ் கேட்டார்.சிறுமியும் குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறுமி மட்டும் கடையில் தனியாக இருப்பதை பார்த்த சுபாஷ் சபலத்தில், எதிர்பாராதவிதமாக சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தமிட்டார். அப்போது கடையின் பின்புறமாக இருந்த சிறுமியின் பெற்றோர், மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை கண்ட சுபாஷ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.ஆனால் அனைவரும் அவரை சுற்றி வளைத்து பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சுபாஷ் கைது செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் சுபாஷுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக ஒரு மாத காலத்துக்குள் வழங்கவும் நீதிபதி ஆர்.மாலதி பரிந்துரை செய்து உள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu