Begin typing your search above and press return to search.
சித்தோடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்துள்ள கொங்கம்பாளையம் கணபதிநகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி(31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த பானுமதி திடீரென பெட்ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் சேலையால் கொக்கியில் தூக்கிட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்ட தாக கூறினர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.