/* */

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கோகிலா (வயது 38). இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மதுவதினி என்ற மகளும், 3 வயதில் தமிழ்நிதின் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோகிலா கோபித்துக் கொண்டு, ஊமாரெட்டியூர் எம்ஜிஆர் நகரில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு செல்லவே, கோகிலாவின் தாயார் சமாதானம் செய்து கோகிலாவை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் கோகிலாவின் வீட்டில் சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கோகிலாவின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, கோகிலா விஷ மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் கோகிலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கோகிலாவின் தாயாரின் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி