அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம்

அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கோகிலா (வயது 38). இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மதுவதினி என்ற மகளும், 3 வயதில் தமிழ்நிதின் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோகிலா கோபித்துக் கொண்டு, ஊமாரெட்டியூர் எம்ஜிஆர் நகரில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு செல்லவே, கோகிலாவின் தாயார் சமாதானம் செய்து கோகிலாவை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் கோகிலாவின் வீட்டில் சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கோகிலாவின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, கோகிலா விஷ மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் கோகிலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கோகிலாவின் தாயாரின் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி