/* */

காட்டு யானை அட்டகாசம்-300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது.

HIGHLIGHTS

காட்டு யானை அட்டகாசம்-300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாயி செல்வன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட ஜி9 ரக வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.


இது குறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். பின்னர, காட்டு யானை விளை நிலத்தில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

Updated On: 29 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா