/* */

மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்

சிவகிரியில் மூன்று வயது குழந்தையுடன் காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே  குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்
X

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் மாவீரன் (வயது 32). இவரின் மனைவி பிரியா (வயது 25). தம்பதியருக்கு ஐந்து வயதில் மகள், மூன்று வயதில் மகன் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு சிவகிரி அருகே தாண்டாம்பாளையத்துக்கு மனைவி, மகனுடன் மாவீரன் வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்துக் கொண்டு கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். மகள் சொந்த ஊரிலேயே உள்ளார். அவரை பார்க்க கடந்த, 6ம் தேதி சென்றார்.

இதையடுத்து, ஊர் திரும்பிய நிலையில் பள்ளிபாளையத்தில் உள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து மொபைல்போனில் மனைவியிடம் பேசியுள்ளார். மகனுடன் பள்ளிபாளையம் வருவதாக தெரிவித்து பஸ்ஸில் வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாவீரன் அளித்த புகாரின்படி சிவகிரி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 13 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...