/* */

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 82.76 அடி யாக உள்ளது

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு  தண்ணீர் திறப்பு  500 கனஅடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கம்போல் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்ப டும் என அரசாணை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 3 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததுள்ளது

இதனால் நேற்று முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு முதற்கட்டமாக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்க ப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 162 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன் கோட்டை க்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 1450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 20 Aug 2023 10:53 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!