/* */

ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு
X

கோப்பு படம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 769 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 2,722 பேர் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 84 ஆயிரத்து 113 பேர் வாக்களிக்க இருந்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ள நிலையில், பதற்றமான 187 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கணிகாணித்து வந்தனர்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இன்று 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் 74.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் 61.91 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 79.42 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில், நகராட்சியில் 96,195 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல், மாநகராட்சிகளில் 2,72,249 பேரும், பேரூராட்சிகளில் 3,14,139 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70.73 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Updated On: 19 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு