/* */

ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும் தன்னார்வலர்கள்!

ஈரோடு மாநகராட்சியில், தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் தன்னார்வலர்களை கொண்டு தினமும் கண்காணிப்பதால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில்  தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும் தன்னார்வலர்கள்!
X

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த போதும், ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. குறிப்பாக, மாநகராட்சி பகுதிகளிலும் அதிக பாதிப்பு இருந்ததால், மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனைகள், 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் மாநகரட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளை தினந்தோறும் கண்காணிக்கப்படுகிறது.

இதில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறியப்பட்டு உடனடியாக வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்வதால், தொற்று மேலும் பரவமால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா பெருமளவு குறைந்திருப்பது தெரிகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் மாநகராட்சி பகுதிகள் முற்றிலுமாக கொரோனாவில் இருந்து விடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார் .

Updated On: 14 Jun 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது