/* */

பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை

பவானிசாகர் அணை பூங்காவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை
X

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக, பவானிசாகர் பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கரில் உள்ள பூங்காவில், சிறுவர்களுக்கான படகு வசதி, சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்று ஆகியவை உள்ளன. விடுமுறை நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பவானிசாகர் அணை முன்பு உள்ள பொழுது போக்கு பூங்காவில், இன்று டிச.31 (வெள்ளிக்கிழமை) முதல், நாளை மறுநாள் ஜன.2 (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...