/* */

ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை
X

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர், சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், தாளவாடி மற்றும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி கொண்டே இருந்தது. இதன் காரணமாக தாளவாடி பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் பல்வேறு ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளம் பையனாபுரம், திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கும் ஆசனூர், கெத்சேசால், கேர்மாளம் ஆகிய வனத்தில் பெய்த மழைநீர் சொர்ணாவதி அணைக்கும் செல்கிறது. அங்கு உள்ள இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வீணாக செல்லும் மழைநீரை அணைக்கட்டி தடுக்க வேண்டும் என்பது தாளவாடி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னிமலை அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 நிரம்பி உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நுரை பொங்க தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.

Updated On: 19 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்