ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 61 பேர் வேட்பு மனு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை  61 பேர் வேட்பு மனு
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் உள்ள 792 பதலிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத்தாக்கள் செய்து வருகின்றனர். முதல் நாளில் யாரும் வேட்ட மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாவது நாளில் 3 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று 61 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் ஈரோடு மாநகராட்சியில் நேற்று 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகளில் 33 பேரும், நகராட்சிகளில் 25 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிககை 64 ஆக அதிகரித்துள்ளது. பிரதான் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
why is ai important to the future