கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வரும் ஏப்.16ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்!

கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வரும் ஏப்.16ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்!
X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வரும் ஏப்.16ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் ' திட்ட முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வரும் ஏப்.16ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் ' திட்ட முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை அன்று ஒரு கிராமத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்து வருகிறார்.

அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் கோபி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகிற 16ம் தேதி காலை 9 மணி முதல் 17ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த ஆய்வின்போது, பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவு படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். மேலும் 16ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் ஆட்சியர், பொதுமக்களை சந்தித்து குறை களை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story