/* */

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து: கூலித்தொழிலாளி உயிரிழப்பு

சித்தோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து: கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் குச்சி கிழக்கு பிடுங்கும் கூலித்தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் அப்பாத்தாள் கோவில் பிரிவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு உணவு சாப்பிடுவதற்காக வரதன் சாலை கடக்க முயன்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் மோதியதில் வரதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உயிரிழந்த கூலித்தொழிலாளி சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பவானி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 7:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்