/* */

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து
X

விபத்தில்,  நொருங்கிய காரின் முன்பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த ஒருவர், இன்று இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில், ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஆப்பக்கூடல் அடுத்த சக்தி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சென்றபோது, அத்தாணியிலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதினார்.


இதில் கார் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபருக்கு கைகால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.காயமடைந்த நபரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில், ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும், போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Feb 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்