பவானி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனங்கள்   மோதல்: 2 பேர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த மாரிமுத்து, அருள் 

Two Wheeler Accident ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Two Wheeler Accident

பவானி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குட்டமுனியப்கோவில், வாய்க்கால் கரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகன் அருள் (20). சென்ட்ரிங் தொழிலாளி. பவானி கல்பாவி, கண்ணாங்கரட்டைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜீவானந்தம் (வயது 20). பஞ்சு மெத்தை தயாரிக்கும் தொழிலாளி. பவானி வாய்க்கால் மேடு கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (வயது 20). வெல்டிங் பட்டறை தொழிலாளி.

நண்பர்களான மூவரும் செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு சித்தார் பகுதியில் இருந்து குட்டமுனியப்பன்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை அருள் ஓட்டிச் செல்ல இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர். பவானியை அடுத்த காடப்பநல்லூர் சேவானூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் மாரிமுத்து (வயது 33). தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.


இவர், நேற்று இரவு வேலை முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பவானி - மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டமுனியப்பன்கோவில், சேவண்டியூர் பிரிவு அருகே எதிரெதிராகச் சென்ற இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அருள் மற்றும் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சதீஷ், ஜீவானந்தம் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story