கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்

கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
X

கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச் 4ம் தேதி) நடைபெற்றது.

கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச் 4ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் கோபி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம். கர்ப்பகால பாதுகாப்பு பராமரிப்பு முறைகள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர்கள் மரு.ரேணுகா, மரு.பிரேமா, காசநோய் சிகிச்சை பார்வையாளர் விவேகானந்தன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story