/* */

கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஆரியங்காட்டு பாலத்தில் தேங்கிய நீரால் கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
X

நீரில் மூழ்கிய பேருந்தை தள்ளும் பயணிகள்.

ஈரோட்டிலிருந்து கணபதிபாளையம் வழியாக கரூர் செல்லும் சாலையில் சின்னம்மாபுரம் அருகே அமைந்துள்ள ஆரியங்காட்டு ரயில்வே நுழைவுபாலம். ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த நுழைவு பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த சாலையி்ல் இருசக்கரவாகனங்களும், கார்களும் செல்லமுடியாத நிலை உருவானது.

இந்த நிலையி்ல் கரூரிலிருந்து பயணிகளுடன் ஈரோட்டை நோக்கி வந்த பேருந்து ஒன்று அந்த நீரில் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அந்த பேருந்தை தள்ளி அதனை வெள்ளநீரிலிருந்து மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலத்தில் நீர்தேங்கி போக்குவரத்து தடைபட்டதால் அந்த வழியேயான போக்குவரத்து மொடக்குறிச்சி நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும், பாலத்தின் அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Updated On: 4 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  9. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!