Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் வெற்றிலை வியாபாரி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற வெற்றிலை வியாபாரி உயிரிழப்பு.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெத்தாகவுண்டர் (வயது 75). வெற்றிலை வியாபாரி. இவர், இன்று காலை, பிரம்மதேசத்தில் இருந்து கரடிநாயக்கனூர் செல்லும் வழியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி, சைக்கிளின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த, பெத்தாகவுண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டிப்பர் லாரியை ஓட்டி வந்த சின்னதம்பிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 32) என்பவர் மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.