/* */

கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி தடுப்பணையில் நாளை (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை வருகிறது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி 1,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனைத்தொடர்ந்து கொடிவேரி அணை பகுதிக்குள் நாளை 27ம் தேதி (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு