/* */

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

வடகிழக்கு பருவ மழை முடியும் வரை கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்வார்கள்.‌ பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் கொட்டி வருவதால் ஏற்கனவே நவம்பர் 30-ம் தேதி வரை கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. எனவே வடகிழக்கு பருவ மழை முடியும் வரை தடுப்பணையில் பொது மக்கள் குளிக்கவோ, கண்டுகளிக்கவோ தடை விதிக்கப்படுகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 1 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...