/* */

கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 12 நாட்களுக்கு பிறகு, கொடிவேரி அணையில் நாளை (புதன்கிழமை) முதல் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல்  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X
கொடிவேரி அணையில், பொதுமக்கள் குளிக்க நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையானது கடந்த, 5ம் தேதி 102 அடியை எட்டியது. பின்னர், அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை தொடர்ந்து இன்றுடன் 12 நாட்களாக நீடித்து வந்தது.இந்த நிலையில், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, நாளை முதல் 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

Updated On: 16 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு