/* */

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கோவை, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகப்படியான, உபரிநீர் திறந்ததால், கடந்த, அக்டோபர் 12ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், 75 நாட்களுக்கு பிறகு மீண்டும், டிசம்பர் 27ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல், தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிர் நிலவுவதால், நூற்றுக்கும் குறைவான பயணிகளே வந்ததாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...