ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற செய்தி சாரல்...

கோப்பு படம்
* ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஊட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து மேம்பால தூணின் மீது மோதிய விபத்தில், டிரைவர் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.
* ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 3 மையங்களில் நடந்த எழுத்துத் தேர்வை 4,228 பேர் எழுதினர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
* ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணியின் போது சுமார் 5 அடி நீளமுள்ள பைக் ஷோரூக்குள் புகுந்த பாம்பை பாத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
* ஈரோடு பேருந்து நிலையம் அருகே எஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் கொடியேற்றம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
* ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது, மாவட்டத்தில் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.
* கோபிசெட்டிபாளையம் ஜெகன் மெட்டல் மார்ட் கடையில் பெண் குழந்தைகள் சர்வதேச விளையாட்டு போட்டியிகளில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் விஸ்வநாதன்ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது.
* பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும், நகராட்சி சார்பில், எனது குப்பை, எனது பொறுப்பு என்ற வாசகத்தை வலியுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
* அந்தியூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்தும், மஞ்சள் பை ஊக்குவிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் தவுட்டுப்பாளையம் பாலம் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதிய, விபத்தில் அந்தியூர் பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
* அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி.இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் அந்தியூர்-பவானி சாலையை கடக்க முயன்ற போது, லாரி மோதியதில் கார்த்தி படுகாயமடைந்தார்.
* அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் ரூ.4.21 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
* மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற எள் ஏலத்தில், 202 மூட்டைகள் எள் மொத்தம் ரூ.16,05,404 ரூபாய்க்கும் விற்பனையானது.
.* பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 906 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 905 கன அடியாகவும் இருந்தது.
* சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஜாதிமுல்லை கிலோ ரூ.500 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ ரூ.332 ரூபாய்க்கும் விற்பனையானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu