ஈரோடு மாவட்டத்தில் இன்று 11-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 25) நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 11ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் உரிய கால இடைவெளி முடிவடைந்திருந்தால் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu