/* */

அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
X

அனுமதியின்றி செம்மண்ணை கடத்தி வந்த லாரி.

அந்தியூர் அருகே ஒட்டபாளையம் கிராமத்தில், வி.ஏ.ஒ.,ஆக பணிபுரிந்து வருபவர், முருகானந்தம், நேற்று அதிகாலையில், வி.ஏ.ஒ.,முருகானந்தம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று, ஓலகடம் – காட்டூர் செல்லும் சாலையில், வேட்டுவனூர் எனும் இடத்தில் வந்து கொண்டு இருந்த போது, அதனை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்ததாக, பிரம்மதேசம், அட்டக்கல்லூர் பகுதியை சேர்ந்த, சுந்தரராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வி.ஏ.ஓ.,அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...