கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது
X

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில், வாணிப்புத்தூர்- கொங்கர்பாளையம் ரோடு குன்னாங்கரடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சுற்றி திரிந்த மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணையில், முத்துக்கருப்பன் வீதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 26) , குன்னாங்கரடு பகுதியை சேர்ந்த சங்கர் (42) மற்றும் இழுபாறை தோட்டத்தை சேர்ந்த குமார் (வயது 40) ஆகிய மூன்று பேரும் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் கருப்புசாமி , சங்கர் மற்றும் குமார் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture