/* */

கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது
X

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில், வாணிப்புத்தூர்- கொங்கர்பாளையம் ரோடு குன்னாங்கரடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சுற்றி திரிந்த மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணையில், முத்துக்கருப்பன் வீதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 26) , குன்னாங்கரடு பகுதியை சேர்ந்த சங்கர் (42) மற்றும் இழுபாறை தோட்டத்தை சேர்ந்த குமார் (வயது 40) ஆகிய மூன்று பேரும் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் கருப்புசாமி , சங்கர் மற்றும் குமார் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Updated On: 5 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?