/* */

கோபி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளிமலைகரடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு போலீசாரை கண்டு தப்பி ஓடிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த கதிர்மாணிக்கம் மகன் நந்து (எ) அஜான்தாகுமார் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, அவரிடம் கஞ்சா வாங்க வந்த அரசூர் தட்டாம்பாளையத்தை சேர்ந்த காமாட்சி மகன் குருபிரசாத், சுண்டக்காம்பாளையம் சின்னபீளமேட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...