திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
X
By - S.Gokulkrishnan, Reporter |30 Dec 2021 6:30 AM IST
திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாகவும் திம்பம் மலைப்பாதை உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து மர பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu