/* */

அத்தாணியில் கால்நடை மருத்துவர் வீட்டில் திருடியவர் கைது

அந்தியூர் அருகே அத்தாணி பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய நபரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அத்தாணியில் கால்நடை மருத்துவர் வீட்டில் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பிரபு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சதீஷ்குமார். இவர் கடந்த மாதம் 6ஆம் தேதி தனது தீபாவளி பண்டிகை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.உடனடியாக இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அத்தாணி பகுதியில் உள்ள டாக்டர் வீட்டிற்கு வந்து பார்த்த ஆப்பக்கூடல் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பரிசோதனை செய்யப்பட்டது.


பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் ரேகைகளை வைத்துப் பார்க்கும் பொழுது டாக்டர் சதீஷ் குமார் வீட்டில் திருடியது பழைய குற்றவாளி பிரபு என்பது தெரியவந்தது. உடனடியாக அத்தாணி பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும், பிரபுவிடம் இருந்து வெள்ளிக் கொலுசுகள் வெள்ளி பொருட்கள் தங்க காசு மற்றும் பணம் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளி பிரபுவை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா