தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா: ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
Theeran Chinna Malai Birthday-ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி தீரன் சின்னமலை பிறந்தார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ம் நாளன்று பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஓடாநிலையில் ரூ.30.00 இலட்சம் மதிப்பில் தீரன் சின்னமலை மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று நினைவு நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை 267-வது அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் , தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் நவமணிகந்தசாமி, உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம்கோயல், அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பாலாஜி (செய்தி), கலைமாமணி (விளம்பரம்) மற்றும் அரச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu