ஈரோடு அருகே கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்திய பொதுமக்கள்

ஈரோடு அருகே கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்திய பொதுமக்கள்
X

குதிரைக்கு வளைகாப்பு செய்யப்பட்ட காட்சி.

அம்மன்பாளையம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது அம்மன்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. தங்களின் வேண்டுதலை நிறைவேற அம்மனிடம் வேண்டும் தங்களின் ஆசை நீரைவேறியுடன் அம்மனுக்கு தங்களால் இயன்ற நேர்த்திக்கடனை செலுத்திக்கடனை செலுத்துகின்றனர்.

அந்தவகையில் அவ்வூரை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயிலுக்கு குதிரை ஒன்றை நேர்த்திக்கடனாய் செலுத்தினார். அது நாள்முதல் அக்குதிரை அப்பகுதி மக்களின் செல்லப் பிள்ளையாய் மாறிப்போனது. இரண்டாண்டுகளாக அவ்வூரில் ஒருவராகவே மாறிப்போன அக்குதிரை கடந்த ஒன்பது மாதங்களாக கருவுற்றிருந்தது.

இதனையடுத்து குதிரைக்கு வளைகாப்பு நடத்த ஊர்பொதுமக்கள் தீர்மானித்தனர். இதனை தொடர்ந்து இன்று காலையில் கோயிலின் முன்பாக குதிரை அலங்காரம் செய்யப்பட்டு ஊர் மக்களால் ஊர்வலமாக மஞ்சள், வளையல்கள், பட்டுச்சேலை உள்ளிட்டவற்றை சீதனமாக எடுத்து வந்து குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்தனர்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட விழாக்கள் நடத்தி பார்த்திருப்போம். ஆனால் கோயில் குதிரை ஒன்றுக்கு வளைகாப்பு நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

Tags

Next Story
Similar Posts
ஈரோடு: அத்தாணி பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு
தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் விற்பனை திருவிழா
ஈரோடு மாவட்டத்தில் வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பவானி அருகே ஜம்பையில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா!..
ஈரோடு : பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
மளிகை கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி