ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

X
நவீன்குமார்.
By - S.Gokulkrishnan, Reporter |4 March 2025 8:40 AM IST
ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் நவீன்குமார் (வயது 35). நவீன்குமார் பெற்றோர், மனைவி, குழந்தையுடன் ஆணைக்கல்பாளையம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பணிக்குச் செல்லாமல் தனது வீட்டில் இருந்த அவர் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஈரோடு தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu