ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா இன்று (மார்ச் 18) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
ஈரோட்டில் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் குண்டம், தேர்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு கோவில் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்பு நேற்று இரவே வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூச்சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 22ம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு கம்பம் நடப்படுகிறது.
27ம் தேதி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. ஏப்ரல் 1ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடக்கிறது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
2ம் தேதி காலை 9 மணிக்கு பொங்கல் விழாவும் தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேரோட்டமும் நடக்கிறது. 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கம்பங்கள் பிடுங்கப்பட்டு, ஈரோடு மாநகரில் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 6ம் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu