ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.13) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.13) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சிறுவலூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவலூர் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம், சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் மடத்துப்பாளையம்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu