ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) மின்தடை ஏற்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம், கங்காபுரம் துணை மின் நிலைய மின் பாதைகள் மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 24) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம் துணை மின் நிலைய மின் பாதை (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை):-
மின்தடை ஏற்படும் இடங்கள்:- டி.வி.கே.வீதி,ராதாகிருஷ்ணன் சாலை, மேற்கு அம்பேத்கர் வீதி, சூரம்பட்டி, கோவலன் வீதி, பாரதிபுரம், மோகன்குமாரமங்கலம் வீதி மற்றும் அண்ணா வீதி.
கங்காபுரம் துணை மின் நிலைய மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் இடங்கள்:- குப்பன்காடு, கொளத்துப்பாளையம், மேட்டையன்காடு, தெற்குபள்ளம், அல்-அமீன் நகர், சூரிப்பாறை மற்றும் தொட்டம்பட்டி.
சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் இடங்கள்:- குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோணார்பாளையம், ஜி.ஜி. நகர், குரும்பபாளையம் மற்றும் மூங்கில்பாளையம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu