ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.22) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.22) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மே.22ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணாநகர், சேனாதிபதி பாளையம், இண்டஸ்ரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், லட்சுமி கார்டன், பாலாஜி கார்டன், லட்சுமி நகர், தெற்குபள்ளம், சுத்தானந்தன்நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி, பழைய ரெயில் நிலையம் பகுதி மற்றும் கள்ளுக்கடைமேடு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu