அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து பெருந்துறை மரபாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று (மே.4) காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பிலலேகரேனஹள்ளியை சேர்ந்த சையத் சதாத் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

லாரி பர்கூர் - தாமரைக்கரை சாலையில் சுண்டப்பூர் பிரிவு பகுதியில் வந்தபோது திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் சையத் சதாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும், பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Next Story
Similar Posts
கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்ககொலை
குழந்தை திருமண தடையை மீறிய இளைஞர் கைது
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!
ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!
ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
கோபி நகராட்சி வரிவசூலில் 93% சாதனை
விழா சூழலில் மஞ்சளுக்கு இடமில்லை – தேர் திருவிழாவால் ஏலம் ரத்து
பவானியில் ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவம்
சேலத்தில் 158 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா