சித்தோடு அருகே பயங்கரம்: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

சித்தோடு அருகே பயங்கரம்: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து
X

விபத்தில் பலியான நடத்துனர் சக்திவேல்.

பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் பேருந்து நடத்துனர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் பகுதியில் அதிகாலையில் முன்னால் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் மீது சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தீடிரென கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்க பகுதியில் மோதியது. இதில் அரசுப் பேருந்தில் முன்பக்கம் அமர்ந்து இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நடத்துனர் சக்திவேல் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் படுகாயமடைந்த ஓட்டுநர் ராஜேந்திரன் உட்பட 30 பயணிகளை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு போலீசார் சரிசெய்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story