ஈரோட்டில் அடுக்குமாடி குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

ஈரோட்டில் அடுக்குமாடி குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு - பவானி சாலையில் அமைந்துள்ள அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 228 குடும்பங்கள் வசித்து வந்தனர். அண்மையில், அக்குடியிருப்பு பழுதடைந்ததால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இடித்து அதே பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்போது 330 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். இதற்கு, அன்னை சத்யா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், அமைச்சர், முதல் - அமைச்சர் தனிப்பிரிவு என பலருக்கும் மனு அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
வீட்டின் எண் மாற்றப்படும் போது அதன் மூலம் அனைத்து சான்றிதழ் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. எனவே குலுக்கல் முறையை கைவிட்டு பழைய பயனாளிகளுக்கு அதே எண் வீட்டை ஒதுக்க வலியுறுத்தி இன்று நடந்த குலுக்கல் முறையை புறக்கணித்த 30க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு - பவானி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu