/* */

ஈரோடில் வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி

பெருந்துறை அருகே காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.

HIGHLIGHTS

ஈரோடில் வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி
X

கார்த்திக்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஆர் எஸ் ரோடு, வீசிவி நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகள் சௌமியா (வயது 28). இவர் பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரை, ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவநாதன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 31) காதலிப்பதாக கூறி, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, காஞ்சிக்கோவில் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட கார்த்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். தற்போது மீண்டும் இவர் பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் மூலம் தொல்லை கொடுத்து வந்த நிலையில், நேற்று காலை சௌமியாவின் வீட்டு அருகே வந்து நின்று கொண்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை சுற்றிவளைத்து பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...